LOCKDOWN MINISERIES#4

ஒருபோதும்
பேருந்துப்பயணம் செய்ய
வாய்ப்பேயில்லாத
கலைவாணன் பயல்
ஆணிமினுமினுங்கும்
பம்பரத்தை மல்லாக்க வைக்கிறான்
கோயில்பட்டி ரோட்டில்

அப்டின்னு ஒரு கவிதை படிச்சிருக்கேன். இன்னிக்கு வாட்ஸ்ஆப்ல ஒரு மெசேஜ் பாத்துட்டு இப்டி தோணுச்சு

ஒரு போதும் சோழியேதும் உருட்டிட வாய்ப்பேயில்லாத கலைவாணன் பயல் லூடோ சேலஞ்ச் அனுப்புகிறான் வாட்ஸ்ஆப்பில்

எவ்வளவு வேடிக்ககையா இருக்கு. தாயம் விளையாட்ரதோட சுவாரஸ்யமே நம்ம கைலருந்து உருட்ர சோழிலதான் இருக்கு. கைல நல்லா தேய்ச்சு நங்குன்னு தரைல கொட்டி உருட்டுற தாயக்கட்டையா , இல்லன்னா புளியமுத்த ஒரு பக்கம் தேய்ச்சு கொட்டாங்குச்சில சுத்தி தரைல அடிக்கிம்போது கிடைக்கிற சந்தோஷம்லா ஸ்கிரீன தொட்டவுடனே தடதடன்னு சுத்தி வந்து நிக்கிர ஒரு நம்பர்ல சத்தியமா கிடைக்காது. ஒரு ஆறு விழுந்தோன்னே காய நகத்துனாத்தான் அடுத்த தடவ உருட்டமுடியும் லூடோலலாம். ஆனா ஒராறு இருபண்ணெடண்டு முத்தாயம் ஒரு ரெண்டு போட்டு இந்தா இந்த ஆறுக்கு ஒரு குத்து குத்தாட்டத்துல ஒரு பண்ணெண்டு போட்டு ஒரே வாய்ப்புல பாதி ஆட்டத்த முடிக்கிற ப்ரோ ப்ளையர்கள சமாளிச்சு ஒரு நாள் முழுக்க ஒரு ஆட்டம் முடியாம இழுத்துட்டேப்போனாலும் கொஞ்சங்கூட போர் ஆடிக்காத தாயக்கட்டைக்கு ஈடாகுமாடா லூடோ

Ludo is a game

But தாயம் is an emotion🔥

Leave a comment