LOCKDOWN MINISERIES#5

Memories never die

கவிதைன்னு சொல்லிட்டு என்ன என்னத்தையோ கிறுக்கி வைக்கிறோமே இந்தப் பழக்கம் எப்போ ஸ்டார்ட் ஆச்சுன்னு வாழ்க்கைய கொஞ்ச ரீவைண்ட் பண்ணி பாத்தா காலச்சக்கரம் வேகமா சுத்தி 2015 ல போய் நிக்குது.

ஈரோடு. ஆதர்ஸ்னு ஒரு ஜெயிலு. அதுக்கு ஸ்கூல்னு இன்னொரு பேரு கூட வச்சிருந்தானுங்க. 11th std படிச்சிட்டு இருந்த பையன் ஏதோ ஒரு ப்ரேக்டைம்ல ரொம்ப சீரியஸா ஒரு suicide note எழுதிட்டு இருந்தான். By the by நான்தான் அது. உண்மைய சொல்லனும்னா அது half suicidal தான்.சூசைட் பண்ற ஐடியால இல்ல. அதாவது தற்கொலை எண்ணம் வர்ர அளவு இந்த ஹாஸ்டல் எண்ண தள்ளிருச்சு இங்க இருந்து என்ன கூட்டிட்டு போய்டுங்கன்னு வீட்டுல சொல்ல பயந்துட்டு அந்த லெட்டர எழுதி அத வச்சு வீட்டுக்கு போயிர்லாம்னு மாஸ்டர் ப்ளான் போட்டு வச்சிருந்தேன் . ( அந்த ப்ளானோட நீட்சியா உயிர்க்கு சேதாரம் இல்லாத அளவு உயரத்துல இருந்து குதிச்சிருவோம்னு ஸ்கூல் தேர்ட் ப்ளோர் போய் பாத்துட்டு ரொம்ப உயரமா இருக்கேன்னு திரும்ப பர்ஸ்ட் ப்ளோர் சன் ஸ்கிரின்ல நின்னத ரெண்டு பேரு பாத்து கூட்டுட்டு போனதுலா இன்னொரு கதை) அந்த மாஸ்டர் ப்ளான்க்காக லெட்டர் எழுதிட்டு இருக்கும்போதுதான் க்ளாஸ்பையன் ஒருத்தன் பாத்துட்டு என்னடா எழுதுறன்னு கேட்டான். ஐயையோ மாட்டிக்கிட்டோமேன்னு நா முழிச்சிட்டு இருக்கும்போது அவனே கேட்டான் கவிதை எழுதுறியான்னு. என்ன பாத்து ஏன் அப்டி கேட்டான்னு இன்னமும் தெர்ல. ஆமாண்டான்னு பொய் சொல்லிட்டு புல்லா எழுதி முடிச்சிட்டு உனக்கு காட்டுறேன்னு அவன அனுப்பி வச்சிட்டு லெட்டர எழுதி முடிச்சேன். இப்போ ஹாஸ்டல் போன கவிதை கேப்பானேன்னு உக்காந்து சொந்தக்கதை சோகக்கதைலா பீல் பண்ணி ரெண்டு பக்கத்து எழுதி எடுத்துட்டுப்போன நல்லா இருக்குன்னு சொல்டானுங்க. அப்போத்திலருந்து கவிதை எழுதுறதுனு ஆரம்பிச்சு கண்டதையும் கிறுக்கி வச்சினுருந்தேன். திடீர்னு ஒருநாள் நைட் அப்துல்கலாம் இறந்துபோய்ட்டார் மறுநாள் லீவுன்னு ஒருத்தன் வந்து சொன்னான். சில பேரு லீவுன்னு ஜாலியா இருந்தானுங்க. கலாம் பத்தி தெரிஞ்ச சில பேரு சோகமா இருந்தானுங்க. இன்னொரு மூலைல நான் எப்படா வீட்டுக்கு விடுவீங்கன்னு குத்த வச்சு பீல் பண்ணிட்டு இருந்தேன் . அந்த பீலிங்ல சம்மந்தமே இல்லாம கலாம் இறந்ததுக்கு ஒரு இரங்கற்பா மாதிரி ஒரு கவிதை எழுதுனேன். அது அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா ஹெட்மாஸ்டர் கைல சிக்கி நல்லா இருக்கேன்னு அவரு நோட்டிஸ் போர்டுல போட்டார். அதுக்கப்ரம் என்னென்னமோ பண்ணி அடம்பிடிச்சு ஸ்கூல பாதிலயே விட்டுட்டு ஒருவழியா திரும்ப வீட்டுக்கே வந்துட்டேன். டிசி வாங்க போன அன்னிக்கு நோட்டிஸ் போர்ட்ல பேர் பாத்துட்டாங்க அம்மா. அதப்பாத்த ஹெட்மாஸ்டர் அப்பத்தான் ஒரு மேட்டர் ஓபன் பண்ணாரு. நான் கேர்ள்ஸ் விங்ல க்ளாஸ் எடுக்கும்போது ஒரு பொண்ணுகூட கேட்டுச்சு யாரோ ஒரு பையன் கவிதை எழுதி நோட்டிஸ் போர்டுலலாம் போட்டிங்களாமே சார் யார்னு.. ஆனா இந்த நாயி + ஒரு கெட்ட வார்த்தை சேர்த்து டிசி வாங்கிட்டு போறான்னு திட்டுனாரு.

I was like …. யோவ் ஒரு மூணு மாசமா க்ளாஸ் எடுக்குறேன்ற பேர்ல அறு அறுன்னு அறுத்தியேயா அன்னிக்குலா இத சொல்லல..

Leave a comment