ஒரு பேமஸான மீம் கன்டென்ட் இருக்கும். வேலையில்லா பட்டதாரி படத்துல கால்சென்டர்ல அம்பதாயிரம் ரூவா சம்பளம் வாங்குவான் தனுஷ் , யாரடி நீ மோகினி படத்துல ஓவர்நைட்ல கோடிங் கத்துக்கிட்டு ப்ராப்ளம் சால்வ் பண்ணுவான். நிறைய மீம் கிரியேட்டர்ஸ் இஞ்சிநியர்ஸ்ன்றதால இத கலாய்ச்சு நிறைய மீம் சுத்தும். நம்ம ஒரு Horti studentன்றதால அத பெருசா கண்டுக்காம விட்டுர்ரது. ஆனா வை ராஜா வை என்னும் திரைக்காவியத்த பாத்த அன்னிக்குதான் தெரிஞ்சது அந்தக்குரங்கு நம்மளயும் சும்மா விடலன்றது. வை ராஜா வை படத்துல வர்ர ஹீரோயினி ஒரு Plant Pathologist. அவளோட இன்ட்ரோ சீனே பத்து பூமிநாதன கலந்துவச்ச கிரிஞ்சா இருக்கும். வீட்டுக்கு முன்னாடி இருக்கிற ஒரு செடில ஒருத்தன் வண்டிய விட்டு ஏத்த ஒரு கிளை ஒடிஞ்சுரும் , அதுக்கு “அய்யயோ வேற அம்மம்மா வேற வேகமா போடா அம்பி வேற”ன்ற ரேஞ்ச்ல அந்த செடிக்கு ஒரு உயிர் இருக்கு அத காயப்படுத்திட்டன்னு வசனம் பேசிட்டு இருப்பா. டக்குன்னு கட் பண்ணி PAT final exam hallக்கு லைட்டா திருப்புனா அங்க ஒருத்தன் முட்ட முட்ட முழிச்சுட்டு கடைசியா எல்லா கேள்விக்கும் answerல Control and preventionல மொத வார்த்தையா Cut and Burnனு எழுதிட்டு இருந்தான்.இத ஏன் இங்க சொல்றன்னா , பேப்பர் எடுத்ததும் முதல்ல “உ”ன்னு பிள்ளையார் சுழி போட்ற மாதிரி பேத்தாலஜி எக்சாம்னா cut and burnனு prevention measuresல எழுதுறது ஒரு சம்பிரதாயம், ஒரு சடங்கு. ஆனா இங்க கிளை ஒடஞ்சதுக்கு கை ஒடஞ்ச மாதிரி பீல் குடுப்பா. ஏன்டா இந்தளவுக்காடா பேஸிக் ரிசெர்ச்கூட இல்லாம ஒரு கேரக்டருக்கு ஒரு profession சூஸ் பண்ணுவீங்க.
இதே படத்துல தலைவன் யுவன் ஒரு பாட்டு போட்ருப்பான் ‘பச்சை வண்ணப் பூவேன்னு ‘ . தலைவன் இசைய பத்தி எல்லாத்துக்கும் தெரியும் அதோட லிரிக்ஸ்தான் நம்ம போக்கஸ். மதன் கார்க்கி கிட்ட ஒரு plant pathalogistஅ லவ் பண்ண என்ன கவிதை எழுதுவீங்களோ அப்டி எழுதுங்கன்னு சொல்டாங்க போல . ஒரு வரி எழுதிருப்பாரு.. ப்பாஆஆஆ
என் கால் ஒன்றில்
முள் குத்தினால் அவள்
முள்ளுக்கு நோய் பார்க்கிறாள்
Pathology படிச்ச எவள்/ன்கிட்டயும் இவ்ளோ ரசனையா ஒரு வரி சொல்றத கனவுலகூட நெனச்சுப்பாக்கமாட்டேன். Suppose நீங்க ஒரு pathology படிக்கிற பொன்ன லவ் பண்ணா , அவகிட்ட ப்ரப்போஸ் பண்றதுக்கு ஏத்த ஒரு லைன் எழுதிருப்பாப்ல
நான் கிளை
ஒன்றில் உந்தன் கை
பார்க்கிறேன் அதன்
ஓரத்தில் லேசாய்
கீறல்கள் கண்டாலே
என் நெஞ்சில் வலி
கொள்கிறேன் இதய சுவர்
மேலே உன் நிறம்
பார்த்தேன்
நானும் மரமாக ஏன்
வரம் கேட்டேன்
இதுக்கெல்லாம் உச்சகட்டமா ஒரு வரி இருக்கும் ..புல்லின்
மேலே பாதம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே
உன் சொல்லை கேட்ட பின்னே
என்னென்ன சொல்றான் பாருங்க .. கம்பி கட்ற கதையெல்லா சொல்றான் 😂

